வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வராண்டாவில் காற்றோட்டமாக இருக்கும் என்பதால் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அழகர் […]
