வீட்டின் பீரோவை உடைத்து 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் செல்வா பகுதியில் கோவிந்தராஜன்-கலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி போந்தை கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வா நகரில் பால் பாக்கெட் போடும் நபர் கோவிந்தராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக கோவிந்தராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
