டெல்லியில் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன் பின்னர் மேற்கூரையை சரி செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. […]
