விவசாயின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிச்சை தலைவன்பட்டி பகுதியில் விவசாயியான குற்றாலநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குற்றாலநாதன் மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து தனது வயலில் வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை அப்பகுதியிலுள்ள ஜன்னலோரமாக மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து குற்றாலநாதன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற […]
