அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் ஆர்.கொமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம், […]
