நாகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழவேளூர் பகுதியில் சென்ற 2008-ம் ஆண்டு வாழஒக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தனியார் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வாழஒக்கூர் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல வருடங்களாகியும் எந்த வேலை வாய்ப்பும் இதுவரை இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் நிலக்கரி துகள்கள் காற்றில் […]
