நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலிக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்ற நிகழ்வில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உதகை அருகே முதுமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மசனகுடி வனப்பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் நாள் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதை கண்ட வனத்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் புலிக்கு விஷம் கொடுத்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மசனகுடி பகுதியை சேர்ந்த அகமது கபீர் […]
