விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாகப்பாடி கிராமத்தில் சின்னகுழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய்மாமனான வினோத்குமார் என்பவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகின்றார். இவருக்கு நிகிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சிவகுமார் மற்றும் நிகிதா காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிவகுமார் குடும்பத்துடன் நிகிதா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். இதனை […]
