நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாய நிலங்களையொட்டி சாக்கடை கால்வைகள் செல்கின்றது. இந்நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பயிர் சாகுபடியும் பாதிப்படையும் அபாயம் உள்ளது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், வேளாண்மை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர் மேலும் ஆட்சியரின் உத்தரவின்படி […]
