மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்காக வைத்திருந்த சோளத்தட்டு திடீரென தீபிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள ராசாபாளையம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில் மாடுகளுக்கு தீவனம் கொடுக்க சோளத்தட்டு, கடலைக்கொடி, போன்றவற்றை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வயலில் வைத்திருந்த சோளத்தட்டு மதிய வேளையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ […]
