கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நசலூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான ராஜ்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் ராஜ்குமார் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் […]
