விவசாயியை அரிவாளால் வெட்ட முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாமடை பகுதியில் ஆறுமுகம் வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ராஜவல்லிபுரம் பகுதியில் வசிக்கும் பொன்னுமணி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தாழையூத்து பகுதியில் ஆறுமுகம்வேல் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்னுமணி மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் ஆறுமுகம் வேலை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆறுமுகம் வேலை பொன்னுமணி […]
