விவசாயிகளுக்கு நானோ யூரியா உரத்தை பயன்படுத்துவது குறித்து கலெக்டர் செய்முறை விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராபாளையம் பகுதியில் அரசு விதைப்பண்ணை அலுவலகத்தில் இந்திய உழவர் உர உற்பத்தி நிறுவனமும் மற்றும் வேளாண்மைத் துறையும் இணைந்து யூரியா உரத்துக்கு மாற்றாக நானோ யூரியா உரம் பயன்படுத்துவது பற்றி செய்முறை விளக்கம் பயிற்சி நடத்தியுள்ளனர். இந்தப் பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் துணை இயக்குனர்கள் சுந்தரம் மற்றும் விஜயராகவன், வேளாண்மை துறை இணை இயக்குனர் […]
