பழுதடைந்த ஷட்டரை சரி செய்ய கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு பகுதியில் புங்கக்குளம், பாதரங்குளம், பெரியகுளம் உள்ளிட்ட 40 கண்மாய்கள் உள்ளது. இந்நிலையில் புங்கக்குளம் கண்மாயை நம்பி 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதனையடுத்து வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் 40 கண்மாய்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் […]
