பயிர் காப்பீடு தொடர்பாக கடலூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெள்ள தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினார். குடிசையில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக […]
