Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் நடத்திய …’பாரத் பந்த்’ போராட்டத்திற்கு … நாடு முழுவதும் ஆதரவு …!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும்  விவசாயிகளுக்கு ஆதரவாக ,நேற்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்  சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த போராட்டமானது 100 நாட்களுக்கு மேல் கடந்து, 120வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசுடன் நடந்த  11 கட்ட பேச்சுவார்த்தையில் ,உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு…. இன்னொரு ஹாலிவுட் நடிகை ஆதரவு…!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு இன்னொரு பிரபல ஹாலிவுட் நடிகை ஆதரவு தெரிவித்து டுவிட் செய்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி காவல்துறையினரின் அடுத்த குறி…. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக கிரெட்டா மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளரான கிரெட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அறசீற்றம் செய்வோம்” விவசாயிகளுக்கு ஆதரவாக…. கமலா ஹாரிஸின் சகோதரி மகள் டுவிட்…!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸின் தங்கை மகள் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமே இருந்து வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. உலகளவில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஆளுநரை சும்மா விடக்கூடாது…! டெல்லிக்கு பறந்த அமைச்சரக்கள்… புதுவையில் அரசியலில் பரபரப்பு …!!

புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். விவசாயிகளுக்கான […]

Categories

Tech |