தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுவதால் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை முன்னிட்டு தமிழக வேளாண் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை நடைபெறும் கூட்டத்தின் போது வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப் படுவார். இவர் வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பார். […]
