ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தில் அமராவதியை தலைநகராக மாற்றுவதற்கு விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அமராவதியை தலைநகராக மாற்றாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காமன் இந்தியா பாலத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகளும் […]
