மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு உரிய லாபம் பெற்றுத்தர வேண்டிமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருக்கும் கல்படை, பொட்டியம், மயிலம்பாடி, மட்டியப்பாறை, மாவடிப்பட்டு, கரியலூர் உள்ளிட்ட 150 கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களில் மரவள்ளி கிழங்குகள் அமோகமாக விளைந்துள்ளது. இருப்பினும் 1 டன் மரவள்ளிக்கிழங்கு ரூபாய் 2,500 முதல் 3,500 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் […]
