கடவுள் பேசுவது போல புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு நாடகம். அரியலூர் மாவட்டம் செந்துறை சேர்ந்த பள்ளி மாணவர்களான அண்ணன் தங்கையின் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏழாம் வகுப்பு மாணவன் யோகீஸ்வரன் நான்காம் வகுப்பு மாணவி யோக ஸ்ரீ இருவரும் கடவுளும் பக்தனும் பேசுவதாக கொரோனா விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துள்ளனர். அதில் அரசு சொல்வதை கடைப்பிடித்தாலே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கடவுளே சொல்வதுபோல் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. […]
