மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தொடங்கி வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சௌந்தர்ராஜன், உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் பிரான்சுவா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் “வாக்கு என் உரிமை, […]
