ராமநாதபுர மாவட்டத்தில் குறும்படங்கள் மூலமாக,தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்குமாறு ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் பொதுமக்கள் தேர்தலில் ,100 சதவீதம் வாக்குப்பதிவு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ,வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு குறும்படங்கள் வாகனத்தின் மூலமாக பெரிய திரையில் திரையிடப்பட்டு ,மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி […]
