விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜல்லிப்பட்டி, சின்னகுமாரபாளையம், மானுப்பட்டி, ராமே கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள விளை நிலங்களில் தென்னை உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர், உணவு தேவைக்காக வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ராமே கவுண்டன்புதூர் கிராம எல்லையில் உள்ள […]
