நடராஜனுக்கு ஊர்மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு நம்பமுடியாத வகையில் இருப்பதாக ஷேவாக் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். பின்னர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்று பல சாதனைகளை படைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நடராஜனின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குதிரை வண்டியில் அமர வைக்கப்பட்டு மலர்கள் தூவி நடராஜனுக்கு மேளதாளத்துடன் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக […]
