நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் பாலுசாமி மற்றும் அவருடைய மனைவி பாண்டி மீனா வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பாலுசாமி சைக்கிளில் டீ விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களின் மூன்றாவது மகள் சங்கரியை வீடு வேலை செய்யவில்லை என அவருடைய தயார் மீனா கண்டித்துள்ளார். […]
