குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் உணவு பொருட்களை எடுப்பதற்காக சாலையின் குறுக்கே ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஓடும்போது அதிவேகமாக வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் சாலை […]
