தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் ( பிப்.19 ) நடைபெற உள்ளது. அதில் சுமார் 2.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்றும் (பிப்.17), நாளையும் (பிப்.18) சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் தலா 500 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “வார இறுதி நாட்களில் ஏராளமானோர் வெளியூர் செல்வது […]
