பீகார் மாநிலத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பாரதிய ஜனதா கூட்டணியினர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் வருகின்ற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஆளும் கூட்டணியை சேர்ந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியினர், தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு அந்தக் கட்சியினர் எழுதி […]
