மது போதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் உமர்பாருக் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து உமர்பாருக்கை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் […]
