உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜ் நகரில் விஜயமாறன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். தற்போது மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இதனை அடுத்து இளைய மகனான கோகுல் மாறன் என்பவர் திரையரங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோகுல் மாறன் மன அழுத்தத்தின் காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். […]
