புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் பால சரஸ்வதி பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 1918-ம் ஆண்டு மே 13-ம் தேதி கோவிந்தராஜூ – அய்யம்மாள் தம்பதியினருக்கு மகளாக பால சரஸ்வதி பிறந்தார். இவருடைய மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசை கலைஞராகவும், நடன கலைஞராகவும் இருந்தார். அதன் பிறகு பால சரஸ்வதியின் பாட்டியின் சகோதரி புகழ்பெற்ற வீணை தனம்மாள் ஆவார். இந்நிலையில் பால சரஸ்வதியின் தந்தை கோவிந்தராஜு ஒரு இசை […]
