அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் லங்கா நகரில் ஹல்பகன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு குட்டி யானை ஒன்று வழி தவறி வந்துள்ளது. அந்த குட்டி யானை தன்னுடைய தாயை பிரிந்ததால் வழி தெரியாமல் கண்ணீர் வடித்துள்ளது. அப்படி தனியாக தவித்து கண்ணீர் வடித்த அந்த யானையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விரட்டி விரட்டி அடித்து வாலை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த குட்டி யானையோ அந்த அரக்கர்களிடமிருந்து […]
