ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பூ வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதண்டபள்ளி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பூ மாலை கட்டுவதற்காக தேவைப்படும் இலைகளை பறிப்பதற்காக கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றின் வழியாக பெருமாள் சென்றுள்ளார். அப்போது திடீரென பெருமாள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இது […]
