மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. […]
