இந்தியாவிலிருந்து ஆப்கானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க கோரி தலீபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வெளியேற தொடங்கியதும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காபூலில் இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறினர். அதன்பின் ஆப்கானில் குறைந்த அளவிலான விமானங்களே செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்தியாவும் கடந்த ஆகஸ்ட் […]
