சைப்ரஸ் நாட்டிலிருந்து, புறப்பட்ட விமானமானது, ஆஸ்திரியா வழியே சென்ற போது அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சைப்ரஸ் நாட்டிலிருந்து நேற்று முன்தினம் பயணிகள் விமானமானது, சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விமானம் ஆஸ்திரிய Graz விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய பயணி ஒருவர், விமானம் புறப்பட்டவுடன் கழிப்பறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது என்று விமானி தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், ஆஸ்திரியாவின் காவல்துறையினர் அந்த பயணியை அழைத்துச் […]
