இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்துக் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. கொரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகள் அறிவுறுத்தியது. ஆனால் மக்கள் அந்த நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை. […]
