மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் யாசர் அராபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் யாசர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யாசரை அக்கம் […]
