அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தனியார் பெண்கள் கல்லூரி அருகில் வந்தபோது மாணவிகளை இறக்குவதற்காக பேருந்து நின்றுள்ளது. அப்போது பின்னால் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. […]
