அரசு பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பனியன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் பாண்டியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வியாபாரத்தை முடித்துவிட்டு வேலம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பாண்டியராஜ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பாண்டியராஜ் […]
