அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருமங்களக்குறிச்சி கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்கரபாணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் வானரமுட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1-ந் தேதி சக்கரபாணி வானரமூட்டியிலிருந்து திருமங்களக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சக்கரபாணி மீது மோதியது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் சக்கரபாணியை […]
