சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்க உள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலை நகர், காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறமாகிய கடற்கரை இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு இடங்களில் உள்ள கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக […]
