விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுடைய கொடிக்கம்பத்தை வைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை. […]
