இலங்கை நாட்டின் கிளிநொச்சி நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது எல்லை பகுதியை கடந்து மீன் பிடித்ததாக விசைப்படகுடன் சேர்த்து கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எனவே, விசைப்படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பல லட்சங்கள் மதிப்பு கொண்ட அந்த விசைபடகுகளை கிளிநொச்சி நீதிமன்றம் அரசுடைமைக்குவதாக […]
