விசைத்தறி பட்டறை அதிபர் வீட்டில் மர்மநபர்கள் 35 பவுன் நகை, 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பளையத்தை அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். விசைத்தறி பட்டறை நடத்தி வரும் இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் திரும்பி வவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
