கிணற்றில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த முத்துசாமி அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு […]
