கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தின் St.Gallen மாநிலத்தில் உள்ள Linsebuhi என்ற மாவட்டத்தில் இரவு நேரம் சுமார் 9 மணி அளவில் உரத்த இடி முழக்கம் போன்ற விசித்திரமான சத்தம் ஒன்று கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் புத்தாண்டுக்காக வாங்கிய பட்டாசுகளை தான் யாரோ கொளுத்திருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கருதி இருக்கின்றனர். ஆனால் பட்டாசு கொளுத்தும் போது ஏற்படும் வெளிச்சம் எதுவும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அங்குள்ள மக்கள் […]
