விசிக தலைவர் திருமாவளவன் சென்னை மாநகராட்சியை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இந்த கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் எழுப்ப தொடங்கினார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திமுக அரசு ஆவடி, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தனி தொகுதிகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து திருமாவளவன் […]
