நாடு முழுதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டினருக்கும் விசா வழங்குவதற்கு சீனா தடை விதித்திருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விசா கொள்கையை சீனத் தூதரகம் நேற்று முன்தினம் மாற்றி அமைத்தது. அதன்படி, ஏற்கனவே சீனாவில் பணிபுரிந்த, மீண்டும் அங்கு செல்ல விரும்பும் இந்தியர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கான விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சீனப் பல்கலைக்கழகங்களில் பயின்று கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பிய, மீண்டும் அங்கு […]
