மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் கோவிலின் கருவறை மேற்கூரைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரைகள் அமைத்து தேவப்பிரசன்னம் பார்த்து முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. அதன்பின் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுசீந்திரம் பிரதீபன் நம்பூதிரி கோவிலில் […]
